தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களுக்கு விருந்து ஆதவன். சூர்யா தன்னை ஒரு கமர்சியல் ஹீரோ ன்னு காட்டியிருக்கிற படம். வழக்கமான சூர்யா படம் இல்லாம கமர்சியலுக்கும் தன்னால பிட் ஆக முடியும்னு நிருபிச்சிருக்கார். தன்னை
மக்கள் தலைவன்னு காமிக்க ஆசை படுற அத்தனை ஹீரோக்களும் பண்றது பஞ்ச் டயலாக் பேசுறது. இதுவரைக்கும் சூர்யா படத்துல இப்படிப்பட்ட அபத்தங்கள் எதுவும் இல்லாம இருந்துச்சு. ஆதவன் படம் ஒபநிங்க்ல சாயாஜி ஷிண்டே நம்மள அழிக்க இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் அப்படின்னு சொன்னதுமே சூர்யா பாட்டோட பைக்கோட பட்டைய கிளப்பிட்டு வர்றாரு - நல்லதானே இருந்தீங்க சூர்யா உங்களுக்குமா இந்த நோய்.
ஒரு வரி கதைதான். குழந்தைகளோட உறுப்புகளை திருடி வெளிநாட்டுக்கு விக்கிற ஒரு கும்பலை விசாரிக்க வர்ற நீதிபதியை கொல்லனும். கூலிபடையை சேர்ந்த கொலையாளியா வர்றாரு சூர்யா. முதல் குறில நீதிபதி தப்ப கதை சூடு பிடிக்குது.
நீதிபதி பிரஸ் மீட் வைக்க அங்க கூடியிருக்கிற பதிரிக்கையாளர்கள்ள ஒரு தமிழ் நிருபர் மட்டுமே அபத்தமா கேள்வி கேக்குற மாதிரி சொல்லியிருக்காரு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். அட ஏன் சார் உங்களுக்கு இந்த புத்தி. நீதிபதி அது யார்யா அது தமிழ்ல ஒருத்தன் கேள்வி கேட்டானே அப்படின்னு கேக்கறதும் தமிழில் பேசினா தமிழனா இருந்தா இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு.
அதுக்கப்புறம் நீதிபதிய சூர்யா கொலை செஞ்சாரா இல்லையாங்கறதுதான் கதை. ஒரு வரி கதையை இளுளுளுளுத்து ஆனா அழகா சொல்லியிருக்காங்க. படம் முழுக்க வர்ற வடிவேலு தீபாவளி வெடி வேலுவா சிரிக்க வெச்சிருக்காரு. படம் முழுக்க அவரோட நகைச்சுவை சிரிக்க வைக்குது. சபாஷ் வடிவேல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் சரோஜா தேவி நடிச்சுருக்காங்க. நயன்தாரா படத்துல வந்துட்டு போறாங்க. நயன்தாரா அறிமுகமாகிற இடத்துல சரோஜா தேவி அழகா ஒரு வசனம் சொல்றாங்க. நீ அடுத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும் அடுத்தவங்கள கெடுக்கிற மாதிரி இருக்க கூடாது அது ஏதோ பிரபுத்துவமான வார்த்தையா தெரியுது.
பத்து வயசு பையனா சூர்யாவை உலா வர வெச்சிருக்காங்க. நல்லாத்தான் இருக்கு
கணேசின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி
டான் மேக்ஸ் -ன் எடிட்டிங் பார்க்க வைக்கிறது
மொத்தத்தில் நிறம் மனம் குணம் காரம் நிறைந்ததவன் ஆதவன்
Monday, October 19, 2009
Friday, October 9, 2009
excuse me boss you have a text message
ஒன் மெசேஜ் ரிசிவ்டு
அறிவியலின் அழகான அற்புதம் இது. அறிமுகமான காலத்தில் ஆடம்பர பொருளாகக் கருதப்பட்ட இது இன்று அத்தியாவசியப் பொருளாக உலா வருகிறது. காலையில் எழுந்ததும் குட் மார்னிங் சொல்வது தொடங்கி விஜயையும் அஜித்தையும் அவமானப் படுத்துவதில் பயணித்து சர்தர்களின் சரித்திரத்தையும் சரமாரியாக சரவெடி வெடித்து இறுதியில் நள்ளிரவில் தூங்கிட்டிங்களா என தூங்கி கொண்டிருப்பவர்களை விசாரிப்பது வரை தொடர்கிறது இந்த எஸ் . எம்.எஸ். பயணம். இதில் பல விஷயங்கள் ஆரோக்கியம் அற்றதாக இருப்பினும் பலருக்கு எந்த கெடுதலும் விளைவிப்பதில்லை.
ஆனால் எதாவது ஒரு மதத்தின் கடவுளை குறிப்பிட்டு அவருடைய நாமத்தை இன்று இரவுக்குள் நூறு முறை சொல்லுங்கள் உங்களுக்கு காலையில் அதன் பலன் தெரியும் அதோடு இதை குறைந்தது பத்து பேருக்காவது பார்வர்ட் செய்யுங்கள் என்ற 'அன்பான' வேண்டுகோளோடு எஸ் . எம்.எஸ். கல் சர்வ சாதரணமாக வளைய வருகிறது. இதாவது பரவாயில்லை இன்னொரு மெசேஜ்
அடிக்கடி வரும் அதாவது வெரி வெரி அர்ஜென்ட் ஐந்து வயது குழந்தைக்கு அவசரமாக ஒ பாசிடிவ் இரத்தம் தேவை படுகிறது இந்த நம்பெரை காண்டக்ட் பண்ணுங்க அப்படின்னு வரும் நாமளும் அடிச்சு பிடிச்சு அதுல குறிப்பிட்ட அந்த எண்ணை தொடர்பு கொண்டா அது சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் அல்லது யாருமே எடுக்க மாட்டங்க
நமக்கு அனுப்பினவங்களை தொடர்பு கொண்டா இது எனக்கு என்னோட நண்பர் அனுப்பினதுன்னு கூலா சொல்வாங்க நமக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்தா குறைந்த பட்சம் அது யாரை பற்றி வந்துருக்குன்னு தெரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம் நம்ம நண்பர்களுக்கு அனுப்பினா அவங்களையாவது நாம தொந்தரவு பண்ணாம இருக்கலாம்
அறிவியல் எண்ணைக்குமே அழகானதுதான் அதை நாம எப்படி பயன்படுத்துறோம் அப்படிங்கறதுலதான் விசயமே இருக்கு
அன்புடன்
அ.ஜெ. ராஜசேகர்
Thursday, October 8, 2009
நட்சத்திரங்கள்
Wednesday, October 7, 2009
கவித கவித
நாளைக்கு வருவாக
மனசுக்குள்ள ஏனோ
மல்லிகை பூ வாசம்
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
கல்யாணத்துக்கு மறு நாளே
மல்லுக்கு போனவக
இன்னைக்குதான் போனுல சொன்னாக
நாளைக்கு வருவாகன்னு
காலம் காத்தாலையே
காக்கா கரைந்சுது
கண்ணான காதலன்
என்னோட கை புடிக்க
நாளைக்கு வருவாகன்னு
கையும் ஓடல காலும் ஓடல
என்ன செய்றேன்னு எனக்கே தெரியல
ராத்திரியே வாச தெளிச்சு
கோலம் போட்டு
வழி மேல விழி வெச்சு
காத்திருக்கேன்
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
பாகிஸ்தான் பரங்கிகலை
பந்தாடும்போது பட்டினி கிடந்தாரோ
பசியாரினாரோ தெரியல
வந்ததுமே வெடக்கோழி வெட்டி
விருந்து வைக்கோணும்
தவமிருந்து காத்திருக்கேன்
தங்க மகன்
நாளைக்கு வருவாகன்னு
வந்ததுமே பாராட்டு விழாவாம்
பத்திரிக்கையும் டிவி யும் மாறி மாறி சொல்லிச்சு
மாலையும் மணி மகுடமும் சூடி
மேடைல இருந்தா எப்படி இருக்கும்
ஏக்கத்தோட காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
அடுத்த வீட்டு அக்காட்டையும்
பக்கத்து வீட்டு பரிமலாகிட்டையும்
ஏற்கனவே சொல்லியாச்சு
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
போருக்கு இடையிலும்
போன மாசம் ஆசையாசையாய்
மகராசன் எடுத்து அனுப்புச்ச
சேலை கட்டி காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
மொத ராத்திரி
மொத மொதல்ல
ரகசியமா சொன்ன ரகசியத்தை
நியாபகம் வைச்சிருக்கரோ
வைக்கலையோ தெரியல
வந்ததுமே கேக்கோணும்
யந்திரமா காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
மல்லிகை பூ மத்தியில
ரோசா பூ ஒன்னு வெச்சா
கண்ணான காதலனுக்கு
கொள்ளை ஆசை
வந்ததுமே வாரி அணைச்சு
தட்டாமாலை சுத்துவாரா
காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
உள்ளூரில் கலவரமாம்
சிலையாகிப் போன தலைவனுக்கு
மாலை போட்டதுல
அந்த கலவரமும்
என்னை கலவரப் படுத்தல
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
கண்ணுல கனவோட
நெஞ்சுல ஆசையோட
நான் இருந்தப்ப திபு திபுன்னு
வந்த போலிசு சொல்லிச்சு
உள்ளூரு கலவரத்துல
என்னவரு வந்த வண்டியும்
எரிஞ்சுருச்சாம்
போஸ்ட் மார்டம் முடிஞ்ச பெறகு
பிணம்
நாளைக்கு வருமுன்னு
மனசுக்குள்ள ஏனோ
மல்லிகை பூ வாசம்
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
கல்யாணத்துக்கு மறு நாளே
மல்லுக்கு போனவக
இன்னைக்குதான் போனுல சொன்னாக
நாளைக்கு வருவாகன்னு
காலம் காத்தாலையே
காக்கா கரைந்சுது
கண்ணான காதலன்
என்னோட கை புடிக்க
நாளைக்கு வருவாகன்னு
கையும் ஓடல காலும் ஓடல
என்ன செய்றேன்னு எனக்கே தெரியல
ராத்திரியே வாச தெளிச்சு
கோலம் போட்டு
வழி மேல விழி வெச்சு
காத்திருக்கேன்
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
பாகிஸ்தான் பரங்கிகலை
பந்தாடும்போது பட்டினி கிடந்தாரோ
பசியாரினாரோ தெரியல
வந்ததுமே வெடக்கோழி வெட்டி
விருந்து வைக்கோணும்
தவமிருந்து காத்திருக்கேன்
தங்க மகன்
நாளைக்கு வருவாகன்னு
வந்ததுமே பாராட்டு விழாவாம்
பத்திரிக்கையும் டிவி யும் மாறி மாறி சொல்லிச்சு
மாலையும் மணி மகுடமும் சூடி
மேடைல இருந்தா எப்படி இருக்கும்
ஏக்கத்தோட காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
அடுத்த வீட்டு அக்காட்டையும்
பக்கத்து வீட்டு பரிமலாகிட்டையும்
ஏற்கனவே சொல்லியாச்சு
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
போருக்கு இடையிலும்
போன மாசம் ஆசையாசையாய்
மகராசன் எடுத்து அனுப்புச்ச
சேலை கட்டி காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
மொத ராத்திரி
மொத மொதல்ல
ரகசியமா சொன்ன ரகசியத்தை
நியாபகம் வைச்சிருக்கரோ
வைக்கலையோ தெரியல
வந்ததுமே கேக்கோணும்
யந்திரமா காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
மல்லிகை பூ மத்தியில
ரோசா பூ ஒன்னு வெச்சா
கண்ணான காதலனுக்கு
கொள்ளை ஆசை
வந்ததுமே வாரி அணைச்சு
தட்டாமாலை சுத்துவாரா
காத்திருக்கேன்
நாளைக்கு வருவாகன்னு
உள்ளூரில் கலவரமாம்
சிலையாகிப் போன தலைவனுக்கு
மாலை போட்டதுல
அந்த கலவரமும்
என்னை கலவரப் படுத்தல
என்னோட மன்னவன்
நாளைக்கு வருவாகன்னு
கண்ணுல கனவோட
நெஞ்சுல ஆசையோட
நான் இருந்தப்ப திபு திபுன்னு
வந்த போலிசு சொல்லிச்சு
உள்ளூரு கலவரத்துல
என்னவரு வந்த வண்டியும்
எரிஞ்சுருச்சாம்
போஸ்ட் மார்டம் முடிஞ்ச பெறகு
பிணம்
நாளைக்கு வருமுன்னு
Saturday, October 3, 2009
கண்ணில் கண்ட நிகழ்வு
சுடும் நிலா
சில நிகழ்வுகளை சுட்டும் நிலா இது
கண்ணில் கண்ட சில சம்பவங்களை உங்களோடு பகிர வருதிறது இந்த நிலா
சில நிகழ்வுகளை சுட்டும் நிலா இது
கண்ணில் கண்ட சில சம்பவங்களை உங்களோடு பகிர வருதிறது இந்த நிலா
திருநெல்வேலி ஒரு அழகான ஊர். எல்ல இடத்துலயும் இப்ப இருக்கிற பிரச்சினைகள் மாதிரி இந்த ஊரும் பார்கிங் பிரச்சினைய தினமும் சந்திசுட்டுதான் இருக்கு. இதுல என்ன விஷயம் இருக்குன்னா இப்ப நெல்லையோட இதயப் பகுதிய இருக்கிற வண்ணார் பேட்டை சிக்னல் ல இப்ப மேம்பாலம் கட்டுறாங்க அதனால போலீசுக்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்துறது பெரிய பிரச்சனையா இருக்கும். இதுல பெண் போலீசும் ஈடுபடுறாங்க
காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் அந்த வேகாத வெயில்ல நின்னு வேலை செய்றதுங்கறது சாதாரணம் இல்ல. நாம கொஞ்ச நேரம் வெயில்ல போயிட்டு வந்தாலே தலை எல்லாம் வலிக்கும் கோபம் பொத்திட்டு வரும்
ஆனா இந்த இடத்துல பாஸ்கர் அப்படின்னு ஒரு காவல் துறை அதிகாரி நின்னுகிட்டு ஒரு மைக் கையில வெச்சுட்டு வர்ற போற வாகனங்கள அவ்வளவு சீரா ஒழுங்கு படுத்துற அழகு இருக்கே அடேங்கப்பா ரொம்ப பொறுமையா டிராபிக் ரூல்ஸ் யும் சொல்லி ஒவ்வொருவரையும் மரியாதைய சொல்ற விதமே சூப்பர் ஆ இருக்கு ஆனா அதே நேரம் ஜங்ஷன் ரயில் வே ரோடு ல போக்குவரத்த ஒழுங்கு படுத்துற போலீஸ் காரங்க ஏதோ வண்டி ஓட்ற டிரைவர் எல்லாருமே அவங்க வீட்டுக்கு டி காபி அப்புறம் மீன் வாங்கி கொடுக்ரவங்க மாதிரி அந்த வண்டிய ஏடு இந்த வண்டிய எதுன்னு சொல்றது கொஞ்சம் அசிங்கமா இருக்கு நட்ட நாடு வெயில்ல நின்னுகிட்டு மரியாதையா சொல்ற அதிகாரியும் இங்கதான் இருக்காரு மரியாத அப்படின்னா என்னனு கேக்குற அசிங்கமான போலிசும் ஒரே இடத்துல
என்ன கொடுமை சார் இது
அன்புடன்
ராஜ சேகர்
அன்புடன்
ராஜ சேகர்
Subscribe to:
Posts (Atom)


